தேவத்வஜர் யார்? நாகேந்திரரா அல்லது ஓம் சாஸ்திரியா? பரிமலும் லிசாவும் பரஸ்பரம் ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை வைக்கத் திணறிக் கொண்டிருக்கின்றனர். நாகேந்திரர் முன்பைவிட அதிக சக்தி வாய்ந்தவராக உயிர்த்தெழ வைக்கப்பட்டுள்ளார். பரசுராமரும் கிருபாச்சாரியாரும் ஓம் சாஸ்திரியின் நொறுங்கி விழுந்துள்ள கடந்தகாலத்திற்குள் மாட்டிக் கொண்டுள்ளனர். விருஷாகபி நிச்சயமான மரணத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறான். மிலரேபர் ஏற்கனவே பலியாகிவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அசுவத்தாமன் தவித்துக் கொண்டிருக்கிறார். பிற சிரஞ்சீவிகள் ஏற்கனவே அனைத்துக் களங்களிலும் முறியடிக்கப்பட்டிருந்தனர். மறைந்திருக்கின்ற மீதி வார்த்தைகள் எங்கே இருக்கின்றன? நாகேந்திரரால் அவை எல்லாவற்றையும் கண்டுபிடித்து முழுப் பாடலையும் பூர்த்தி செய்ய முடியுமா? அல்லது சிரஞ்சீவிகள் அவரைத் தடுத்துவிடுவார்களா? நேரத்தோடு மல்லுக்கு நின்று கொண்டிருக்கின்ற சிரஞ்சீவிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை இந்த இறுதிப் பாகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.