*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
நாடு மற்றும் நாட்டு மக்களின் மேலிருக்கும் அக்கறையுடன் சாலை சிறக்கின்றது. ஒரு புத்தகம் பல ஆசிரியர்களுக்கு சமம் என்பது போல் இந்த ஒரு சாலை புத்தகம் மனிதனும் மனித வாழ்க்கையும் எவ்வாறு இயற்கையுடன் ஒருங்கிணைத்து செல்கின்றது என்பதை கச்சிதமாக விவரிக்கின்றது. இதில் சாலைகளின் நிலை மற்றும் சிறப்பு அம்சங்கள் சாலைகளின் ஒழுங்கீனங்கள் சாலைகளில் மேற்கொள்ளப்படும் அவலங்கள் அதனால் மனிதன் இயற்கை இயற்க்கையைச்சார்ந்த பிற உயிரினங்கள் ஆகியவைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் மக்கள் சாலையை பயன்படுத்தும் வழிமுறைகள் சாலை சீர்கேட்டினால் ஏற்படும் வாழ்வாதார துயரங்கள் சிறந்த சாலைகளின் அவசியங்கள் அதனால் உருவாகும் முன்னேற்றங்கள் சாலைகளினால் மக்கள் அன்றாடம் சந்திக்கும் நிலைப்பாடுகள் நாடு வளர்ச்சி மற்றும் நாட்டின் முன்னேற்ற தேக்கம் ஆகியவைகள் மிகவும் பொறுப்புடனும் உன்னிப்பாகவும் கருத்தில் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.. குறிப்பாக மனிதன் தன் வாழ்க்கை அன்றாட வேலைகளிலும் சாலையின் தாக்கம் எவ்வாறு பிரதிபலிக்கின்றது முதல் விவசாய பாதிப்பு மக்கள் மனநிலை மாற்றங்கள் எவ்வாறு மேற்கொள்வது சுயகாட்டுப்பாட்டின் அவசியம் ஆகியவைகளும் சிறந்த முறையில் கையாளப்பட்டிருக்கிறது.. நாட்டின் மேல் அக்கறை கொண்ட அனைவரின் கையிலும் மனத்திலும் கண்டிப்பாக இந்த சாலை சென்றடைந்து சிறப்பிக்கும் என்பதில் சிறு துளி சந்தேகமில்லை.