திருக்குறள் தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களைக் கொண்ட ஒரு அறநெறி நூலாகும். இது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. திருக்குறள் அதன் பொதுத்தன்மையால் உலகிற்கான புனித நூலாகப் பாராட்டப்படுகிறது. திருக்குறள் உலக அளவில் இரண்டாவது அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். அதன் அனைத்து உள்ளடக்கமும் மதச்சார்பற்ற சிந்தனைகளும் மனிதநேய மதிப்புகளும் உலக அறிவும் ஆட்சியைப் பற்றிய சிந்தனைகளும் இயற்கையைப் பற்றிய சிந்தனைகளும் இதை உலகளாவிய வழிகாட்டியாக ஆக்குகின்றன. பரிமேழலழகர் முதல் சாலமன் பாப்பையா வரையிலான பல அறிஞர்கள் இதற்கு உரைநூல்கள் எழுதியுள்ளனர். இவற்றில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் உரை அவரது திராவிடச் சிந்தனைப் பின்னணி காரணமாக தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அவர் பல்வேறு சொற்பயன்பாடுகளையும் தீவிரமான திராவிட சிந்தனைகளையும் பயன்படுத்தி பழமையான குறள்களுக்கு உரை எழுதியுள்ளார்.