வாழும் முறைகள் மாறினாலும் சமுதாய வழக்கங்கள் பேச்சு வழக்குகள் குடும்ப உறவுகள் மாறினாலும் என்றும் மாறாதவை மனிதக் கணிப்புகளும் உணர்ச்சிகளும்தான். நாணயம் நேர்மை அன்பு கருணை பாதுகாப்பு உணர்வு எல்லாம் மாறாத கணிப்புகள். Human Values. கொலைக்காரனும் குரூரமாக வதைத்தவனும் இன்றும் குற்றவாளிதான். அன்பாலும் கருணையாலும் அனாதைகளை ஆனைத்துச் செல்பவன் உபகாரிதான். என் கதைகளில் இப்படிப்பட்ட பல கதை மாந்தர்களைச் சந்தீப்பீர்கள். காலத்தைத் தாண்டியும் உங்களால் அவர்களை ஏற்க முடிந்தால் நான் மெத்த மகிழ்வேன். ஏன் வாசகர்களுக்கு நன்றி கூறுவேன்.