லீ லேண்ட் (ஒரு கற்பனை நகரம்) நகரத்தில் நடக்கும் நிழல் உலக குற்றங்களுக்கு பின்னால் இருக்கும் மேத்யூஸ் என்கிற கேங்ஸ்ட்டர்... குற்றங்களுக்கு பின்னால் இருக்கும் மேத்யூஸின் முகத்திரையை வெளி உலகத்திற்கு கொண்டு வர முயற்சிக்கும் சலீம் என்ற பத்திரிக்கைக்காரன்... காலத்தின் சூழ்ச்சியால் குற்றப்பின்னணியில் வாழும் விக்டர் என்ற இளைஞன்... குற்றங்களை தடுக்க முயற்சிக்கும் போலீஸ் குழு... குற்றங்களால் பாதிக்கப்படும் சாதாரண மனிதர்கள்... இவர்களின் வஞ்சம் தீர்க்கும் கதையே இந்த வஞ்சம் தீர்த்த நாட்கள்.