ஒவ்வொரு வேட்டைக்கும் தனித்த முகமுண்டு. வீழ்த்தியவன் சூளுரைக்கும் கதையை விட கொல்லப்பட்டு பலியாகி அடங்கிய உயிரின் நிலைகுத்திய கண்கள் பகிரும் கதை வீரியமானது. அப்பார்வையின் திசையிலிருந்து துவங்குகிறது ஒரு புதிய கதை. வேட்டைக்கென்ற விதிகளை இயற்கை வகுத்துள்ளது. விதிகளை மீறும் வேட்டைகளைக் கொலை என்கிறது அவ்விதி. துரோகமும் கயமையும் வேட்டையின் விதியில் அடங்காது. பசி மட்டுமே அதன் அடிப்படை. பசி வன்மம் கொள்ளாது. குரூரம் அதன் பாதையல்ல.