ஒரு மணிவிழாக் காலத்துக்கும் மேலாகத் தமிழ்ப் பணியிலும் பல்லாண்டு காலமாக மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டிருக்கும் எம். எஸ். இன் தேர்ந்தெடுத்த தமிழாக்கங்களின் தொகுப்பு இந்நூல். நம்பகம் சரளம் தெளிவு இவையே இந்த மொழிபெயர்ப்புகளின் இயல்பு. தமிழில் மேற்கொள்ளப்படும் கணிசமான மொழியாக்கங்களில் பெரும்பாலும் காணக் கிடைக்காத இந்த இயல்புகளே எம். எஸ். இன் மொழிபெயர்ப்புகளை இலக்கியத் தரமானவையாகவும் வாசகருக்கு அணுக்கமானவையாகவும் நிலை நிறுத்துகின்றன. கூடவே மொழிபெயர்க்க அவர் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் வாசகருக்கும் மொழிக்கும் கொடையாகவும் அமைகின்றன.