யவனிகா ஸ்ரீராம் கவிதைகளில் அமையும் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்களே சில தமிழாகிவிட்ட சொற்களும் உண்டு. இவரது கவிதைகளில் வரும் பொருட்கள் யாவுமே தமிழ்நாட்டில் கிடைப்பதுதான். அப்பொருட்கள் யாவும் தமிழரிடையே புழங்கும் சொற்களைக் கொண்டே குறிப்பிடப்படுவனதாம். ஆனால் இச்சொற்களும் பொருட்களும் இவருடைய கவிதைகளில் அமையும்போது இதுவரை நாம் அறியாத அனுபவித்திராத பொருளையும் அழகையும் வாசனையையும் கொணர்ந்து தருகின்றன. இது தமிழுக்கு மிகவும் புதியது. தமிழ்க்கவிதை மரபில் தனித்துத் தெரியும் ஒரு சுயமான ஆக்கக்கூறு. எல்லாக் கலையும் சாதகத்தால் ஒருவருக்கு மனம் கூடி அமையப் பெறுவது. யவனிகாவுக்கு அப்படி ஒரு சாதகத்தால் அமையப் பெற்றவை இக்கவிதைகள். இவை ஐந்திணைக்கப்பால் ஆறாவது திணையையும் ஆறாவது நிலத்தையும் ஆக்குகின்றன. அவ்வகையில் ஈராயிரமாண்டுத் தமிழ்க்கவிதை மரபில் இவை ஆறாம் புலனை நமக்கு ஆக்கித் தருகின்றன. - ரமேஷ் - பிரேம்
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.