இந்தக் கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக இருப்பதற்கு காரணம் புதுமையான வரிகள். ஒவ்வொரு வரியிலும் வார்த்தையிலும் நம்மை அதிசயங்களைக் காணப் பண்ணும் திறன் கொண்டவையாய் இருக்கின்றன. இந்த வரிகளை விடுத்து வேறுவிதமாய் இவற்றை எழுதியிருந்தால் நிச்சயம் இவை தோற்றுப்போன முயற்சியாகவே இருக்கும். உணர்வுப் பூர்வமான நேர்மை மொழியாளுமை இவை இத்தகு கவிதைகளுக்கு ஆதாரப் புலமாக இருக்கின்றன. யவனிகா ஸ்ரீராமின் அரசியல் நிலைப்பாடுஎன்பது ஆதார உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் பாலியல் சுதந்திரம் மார்க்சியம் உலகமயச் சூழல் எதிர்ப்பு சூழியல் சிந்தனை தசையும் இரத்தமுமாய் இருக்கும் உடலையும் உணர்வுகளையும் கொண்டாடுதல் ஆன்மீகத்துக்கு மாற்றாக கலையை முன்னிறுத்துதல் ஆகியவற்றைச் சொல்லலாம். - பாலா கருப்பசாமி
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.